சென்னை : மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்க சென்னை பொன்னேரியில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சி முதியோர் இல்லத்திலும் சுர்ஜித்துக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என சேலம் ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.