×

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனை

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 48 மணி நேரமாக தொடர்கிறது. குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழிதோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.  கையில் சுருக்கு போட்டும், ரோபோ இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் குழந்தையை மீட்க முயற்சிக்கப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் மீட்பு பணிக்காக அதிக திறன்கொண்ட இரண்டாம் ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தது. சுர்ஜித்தை மீட்க ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன்கொண்ட ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழித்தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

88 அடி ஆழ்த்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுக்காட்டிப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் மழை பெய்கிறது. மழை பெய்து வருவதால் குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணறை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனைத்து தரப்பு மகக்ளும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து சுஜித்தை மீட்க உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை  ஓட்டேரியில் சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நாகையில் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என தோபுத்துறையில் இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகை நடத்தினர்.

Tags : Tamil Nadu ,recovery ,well , People,pray,over Tamil N
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...