நீலகிரி: வனவிலங்குகளின் பாதுகாப்புக் கருதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உள் மற்றும் வெளி மண்டல வனப்பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தால் வனச்சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.