×

பாஜ.வை மக்கள் கட்டுப்படுத்த துவங்கி விட்டனர் ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது கருத்துக்களை குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில்,  ‘மக்களையும், அரசு அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜ அரசு உறுதி கொண்டிருந்தது. ஆனால், மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள், பாஜ.வை மக்கள் மீண்டும் கட்டுப்படுத்த தொடங்கி விட்டதை காட்டுகிறது.  அரசு அமைப்புகள் தங்கள் சுதந்திரத்தை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றன. அவைகள் மக்களை தவற விடாது என நம்புகிறேன்.’ என கூறியுள்ளார்.



Tags : BJP , BJP, People, P. Chidambaram
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...