×

பராமரிப்பு பணி காரணமாக வேளச்சேரி மின் மயானம் மூடல்

சென்னை: வேளச்சேரி மின் மயானபூமி நாளை முதல் நவம்பர் 9ம் தேதி வரை செயல்படாது, பொதுமக்கள் அருகில் உள்ள மயமான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி  வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, அடையாறு மண்டலம், கோட்டம்-174, வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள மின் மயான பூமியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியிருப்பதால், நாளை முதல்  நவம்பர் 9ம் தேதி வரை மேற்கண்ட மயான பூமி இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள பாலகிருஷ்ணாபுரம், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி மயான பூமிகளை  பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Closure ,Velachery Power Station , Velachery, E Cemetery, closure
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...