மும்பை: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கியார் (KYAAR) புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கியார் புயல் காரணமாக கடலோர மாநிலங்களானா கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.