×

வெள்ளக்கோவில் அருகே பயங்கரம் தம்பதி கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு சடலம் தோண்டி எடுப்பு

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே தம்பி, அவரது மனைவியை கொன்று  புதைத்த பெண், மகளுடன் சேர்ந்து சம்மந்தியையும் கொன்று புதைத்துள்ளார். அந்த சடலமும் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் (50). இவர் தனது மனைவி வசந்தாமணியுடன் (42), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே  உள்ள உத்தண்டகுமாரவலசில் உள்ள அக்கா கண்ணம்மாள் வீட்டுக்கு கடந்த  10ம் தேதி சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். சொத்து விற்பனையில் கிடைத்த பணத் தகராறில் தம்பியையும் அவரது மனைவியையும் கண்ணம்மாளும், அவரது மருமகன் நாகேந்திரனும் கொலை செய்து வீட்டு பின்புறத்தில் புதைத்தனர். இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணம்மா, நாகேந்திரன், அவரது மனைவி பூங்கொடி உள்பட 4 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதனிடையே, நாகேந்திரனின் சகோதரி நாகேஸ்வரி தனது தாய் ராஜாமணி கடந்த 5  மாதங்களுக்கு முன்பு மாயமானதாக வெள்ளக்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில், போலீசார் விசாரித்ததில், கண்ணம்மாள் வீட்டில் ராஜாமணி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, கண்ணம்மாளையும், பூங்கொடியையும் போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை கண்ணம்மாள் வீட்டுக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு, ராஜாமணியை கொன்று புதைத்த இடத்தை அவர்கள் காட்டினர். பின்னர், காங்கயம்  தாசில்தார் புனிதவதி முன்னிலையில் உடல் தோண்டி  எடுக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த நாகேஸ்வரி அது தனது தாயின் உடல்தான் என ெதரிவித்தார். இதைத்தொடர்ந்து, கொலை குறித்து 2 பேரிடம் நடத்திய விசாரணையில், ‘நாகேந்திரன். ஈரோட்டில் உள்ள தனது வீட்டு பத்திரத்தை  வைத்து கடன் பெற நாகேஸ்வரியை சாட்சி கையெழுத்து போட வற்புறுத்தினார். அவர் மறுக்கவே ராஜாமணி கையெழுத்திட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நாகேஸ்வரி, தனது தாய் கண்ணம்மாளுடன் சேர்ந்து ராஜாமணியை  அரிவாளால் வெட்டிக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளனர்’ என்று தெரியவந்தது.


Tags : site ,murder ,White Temple. , couple was killed ,buried,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...