×

எழுத்தாளர் கி.ரா மீது வழக்கு ஐகோர்ட் கிளை ரத்து

மதுரை:  புதுச்சேரியைச் சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் கி.ரா (எ) கி.ராஜநாராயணன் (97). இவர், கடந்த 2012ல் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அவமரியாதைக்குரிய கருத்துக்களை கூறியிருந்ததாக மதுரையைச் சேர்ந்த கதிரேசன், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசாரும் எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கி.ரா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 90 வயதைக் கடந்த நாடறிந்த எழுத்தாளர்.  எனவே, அவர் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த முகாந்திரமும்  இல்லாததால் , வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.


Tags : Icord Branch ,Kira. Highcourt Branch , Writer Kira Case,canceled, highcourt Branch
× RELATED அனைத்து சாதியினருக்கும்...