×

காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கி இருவர் பரிதாப பலி

சென்னை: காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். காஞ்சிபுரத்தை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (50). நேற்று கர்ணன், அதே பகுதியில் உள்ள குப்பத்துக்கொல்லை ஏரிக்கரையில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மதியம் சுமார் 3 மணியளவில் கருமேகம் திரண்டு மழை பெய்தது. அந்த நேரத்தில், திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கர்ணன் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார்.காஞ்சிபுரம் அடுத்த சீயட்டி காரை கிராமத்தின் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த ராணி (34) என்ற பெண்ணும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Lightning strikes ,Kanchipuram Kanchipuram ,lightning strike , Kanchipuram, lightning strikes, two killed
× RELATED கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால்...