×

ஆரோவில் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை: கடன் பிரச்சனையால் விபரீத முடிவு!

விழுப்புரம்: ஆரோவில் அருக கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது குயிலாப்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் வீடு கடந்த மூன்று தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள், ஆரோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் இன்று வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டினுள் சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என 4 பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர மூர்த்திக்கு கடன் பிரச்சினை இருந்தாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுந்தரமூர்த்தியின் மனைவி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். மகள்கள் கிருத்திகா (17), இவர் பிளஸ் டூ படித்து வந்தார், மற்றொரு மகள் சமிக்ஷா (13) இவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடன் பிரச்சினையால் பிள்ளைகளுடன் பெற்றோர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : suicide ,Poisoning ,Auroville. Auroville , Villupuram, Auroville, poisoning, suicide, debt problem
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை