×

கேரள ஜோளியின் ஸ்பெஷல் சயனைடு பாயாசம், ஜூஸ் போல அனு ஸ்பெஷல் தூக்க மாத்திரை தோசை சாப்பிட்ட கணவன் கொலை

* அக்கா மகன் ஐடியாவில் தீர்த்துக்கட்டிய மனைவி
* போலீஸ் விசாரணைக்குப்பின் சிறையில் அடைப்பு

சென்னை: சொத்தை அடைவதற்காகவும், உடல் சுகத்துக்காகவும் பாயாசம், ஜூஸ் ஆகியவற்றில் சயனைடு கொடுத்து கொன்ற பரபரப்பே அடங்காத நிலையில், சென்னையில் அனு என்ற பெண் கணவனுக்கு தோசையில் தூக்க மாத்திரை கொடுத்து, அக்கா மகனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த புழல் புத்தாகரம் வெங்கடசாய் நகர் 13வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (24). இவர், அதே பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தார். விழுப்புரம் அடுத்த முகையூரை சேர்ந்த அனுப்ரியாவை (23) காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லோகேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் சுரேஷ் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அனுப்ரியா புழல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சுரேஷ் கழுத்து நெரித்து கொலை செய்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனுப்ரியாவை புழல் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், தனது கணவர் சுரேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வார். இதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவும் போகவில்லை. தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்துவார்.  இது பல நாட்களாக தொடர்ந்து வந்ததால் சென்னையில் உள்ள 22 வயதான அக்கா மகனிடம் கூறினேன். உன்னை துன்புறுத்தும் அவன் உயிரோடு இருக்கக் கூடாது என்று சொன்னான். அதற்காக அவன் சுரேஷ் சாப்பிடும் தோசையில் தூக்க மாத்திரையை அதிகம் கலந்து கொடுத்துவிடு. அதை சாப்பிட்டவுடன் அவன் தூங்கிவிடுவான். அவனை எளிதாக கொன்றுவிடலாம். நீயும் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து தோசை மாவில் துளாக்கிய தூக்க மாத்திரையை அனுப்ரியா கலந்துள்ளார். பின்னர் போதையில் வந்த சுரேசுக்கு தூக்க மாத்திரை கலந்த தோசையை கொடுத்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த சுரேசிற்கு தூக்க மாத்திரை தோசையை சாப்பிட்டதால் சுயஉணர்வு இல்லாத நிலைக்கு சென்றார். இதுகுறித்து தூக்க மாத்திரை தோசைக்கு ஐடியா கொடுத்த அக்கா மகனை அழைத்துள்ளார். அவன் வந்ததும் சுயஉணர்வு இல்லாமல் கிடந்த சுரேஷின் கழுத்தை நெரிக்க அனுப்ரியா தன் துப்பட்டாவை கொடுத்துள்ளார். அதில் தழும்பு தெரியாது என்று நினைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த கொலை சம்பவம் ெவளிச்சத்துக்கு வந்துள்ளது.

அக்கா மகன் கூறியதாக போலீசார் கூறியதாவது: சுரேஷ் என்னையும் அனுப்ரியாவுடன் நான் வைத்திருந்த பாசத்தையும் தவறாக நினைத்தார். அதனால் அவளை அவர் தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து அனுப்ரியா என்னிடம் சொன்னார். அவர் இறந்தால்தான் உனக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்று கூறி கொலைக்கான ஐடியா கொடுத்தும், கொலையும் செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அனுப்ரியாவையும், 22 வயதாகும் அவரது அக்கா மகனையும் போலீசார் கைது செய்தனர். கேரள பெண் ஜோளி சொத்தை அடைவதற்காக சயனைடு சூப், பாயசம், கேக் கொடுத்து 6 பேரை கொன்ற பரபரப்பே இன்றும் அடங்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Anu Special Sleeping Pill Toys Kerala Specialty Cyanide Anu Special Sleeping Pill , Kerala Specialty Cyanide,Anu Special Sleeping Pill
× RELATED இன்று காலை 11 மணி முதல் 3 வரை...