டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்திருந்தது. இந்நிலையில் ஒரே வழக்கில் ஒரே சம்பவத்திற்கு இருமுறை கைது தேவை இல்லை என உச்சநீதிமன்ற தரப்பு உள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் முடியாது; காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவும் முடியாது என கபில் சிபல் வாதம் செய்து வருகிறார். மேலும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை எனவும் வாதம் செய்து வருகிறார்.