×

2 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் : தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக தீவிர பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் இரவு முதல் கட்ட பிரசாரத்தை முடித்த அவர், நேற்று காலை சென்னை செல்ல தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:

இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என எனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளேன். இதன்மூலமாக தொழில் முதலீடுகள் ஈர்க்க கூடுமா என்பது குறித்த கேள்விக்கு, நீண்ட அறிக்கை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். எனவே அதை பற்றி இப்போது பேசத்தேவையில்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

Tags : by-election ,DMK Coalition ,MK Stalin ,DMK Alliance ,Thoothukudi By-election , By-election, DMK Alliance , huge success
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...