மாமல்லபுரம் சிற்பங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சுற்றி பார்த்தனர். கடைசியாக அவர்கள் கடற்கரை கோயிலை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கடற்கரை கோயில் வளாகம் முன்பாக கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக அங்கு திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட 6 கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இந்திய மற்றும் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், தேசப்பற்றையும் விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. கலாஷேத்ரா குழுவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியை இருநாட்டு தலைவர்களும், உடன் வந்த அதிகாரிகளும் கண்டுகளித்தனர். பிரதமர் ேமாடி இருக்கையில் அமர்ந்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சொடக்கு விட்டபடியும், அதில் பாடப்பட்ட பாடல்களை பாடியபடியும் ரசித்தார். சுமார் அரை மணி நேரம் கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழுவினருடன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.