திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை தொடர்பாக முருகன், சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2ம் தேதி 28 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. எஞ்சிய தங்க நகைகள் குறித்து விசாரணை நடத்த முருகன், சுரேஷை காவலில் எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.