சென்னை: தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர் கென்னடி பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ரவீந்திரன் ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டிஎஸ்பி இளங்கோவன் விருத்தாசலம் உட்கோட்ட டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.