டெல்லி: மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில் தான் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது எனவும், சில சிறிய கூட்டங்கள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என தெரிவித்தார்.