×

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: கர்நாடகா கடிதம்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக  காவிரி நீர்ப்பாசன வாரியம் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு கடிதம்  எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், ‘காவிரி  ஆற்றின் குறுக்கே மேகதாவில் நீர்மின் உற்பத்தி திட்டத்திற்காக அணை  கட்டுகிறோம்.இந்த இடத்தில் அணை கட்டுவதால் வன விலங்குகள், மரங்களுக்கு  பாதிப்புகள் ஏற்படாது. இத்திட்டத்தினால் நீர்மின் உற்பத்தி செய்வதுடன்  குடிநீர் திட்டத்திற்கும் இது பயனுள்ளதாக அமையும்.

இது தடுப்பணை தான்.  அதுவும் குடிநீர் மற்றும் நீர்மின் உற்பத்திக்கு என்பதால் தமிழ்நாட்டின்  அனுமதி தேவையில்லை. வனவிலங்குகள் மற்றும் மரங்களுக்கு பாதிப்பில்லாத  இத்திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Tamil Nadu , Tamil Nadu ,permission, Karnataka letter
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...