சென்னை: மணிரத்னம் உள்ளிட்டோர் பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் அபாயகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முத்தரசன் கூறியுள்ளார். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேச துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது வேறு எந்த ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது உள்ள தேசதுரோக வழக்கை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.