சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அறிஞர்கள், பல துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வைகோ வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை மோடி வேடிக்கை பார்க்கக்கூடாது என்று 49 பேர் கடிதம் எழுதியுள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து சொல்வதை தேசத்துக்கு எதிரானதாக கருதக்கூடாது என்று கடிதத்தில் கூறியிருந்தனர்.