விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் நெல்லை தேதிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகுரு மற்றும் ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது தேவதான அரசு விதைப்பண்ணை அருகே கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.