×

நாராயணசாமி பேட்டி புதுச்சேரியில் படிப்படியாக மதுவிலக்கு

கன்னியாகுமரி: புதுச்சேரியில் மதுவிலக்கை படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி நினைவு பாத யாத்திரையில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி என்கிற வகையில் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அவருடைய அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.  மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக த்தான் அமல்படுத்த முடியும். புதுச்சேரியின் நிலை வேறு, தமிழகம் வேறு. மற்ற மாநிலங்களின் நிலை வேறு. இதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுவினால் ஏற்படும் கொடுமைகள் எங்களுக்கு  தெரியும். அப்படி இருந்தாலும் கூட புதுவை மக்கள் பிரெஞ்ச் கலாச்சார வழியில்  வந்தவர்கள். இதனால் படிப்படியாகத் தான் நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Puducherry Puducherry , Interview ,Narayanaswamy, Gradual,liquor , Puducherry
× RELATED இருசக்கர வாகனத்தில் சென்றபோது...