×

இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால் பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர்

*புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை சீரமைப்பு பணி நடைபெற்றது. கழிவுநீர் வாய்க்கால் பணிகளும் நடைபெற்றன. குண்டுசாலையில் கழிவுநீர் வாய்க்காலுடன் இணைக்கும் சிறிய கழிவுநீர் வாய்க்கால் பணிகள் சரிவர முழுமை பெறாமல் உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு புதிதாக தார்சாலை போடப்பட்டு விட்டது. முழுமை பெறாமல் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் மட்டும் சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் திறந்த நிலையில் ஆபத்து ஏற்படுத்தும்படி காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இருட்டான பகுதி என்பதால் வாய்க்கால் திறந்த நிலையில் பள்ளமாக கிடப்பதை அவர் கவனிக்கவில்லை. இதனால் அவர், அந்த வாய்க்கால் பள்ளத்தில் தவறி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து அந்த முதியவரை மீட்டு சாலையில் படுக்க வைத்தனர். பின்னர், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வந்ததும் அந்த முதியவரை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நேற்று மாலை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால் பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் appeared first on Dinakaran.

Tags : Puducherry Puducherry ,Puducherry ,Bhumiyanpet Bavanar ,Kundusalai ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு