×

விசாரணைக்கு சென்றபோது எஸ்ஐயை தாக்கியவர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (26), மீனவர். மது பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் குடித்து விட்டு வந்து, தாய் புஷ்பத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புஷ்பம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முதல்நிலை காவலர் மணிகண்டன் (39), எஸ்ஐ ராஜசேகர் (56) ஆகியோர் நேற்று கார்த்திக் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர்.

அப்போது, மது போதையில் இருந்த கார்த்திக், காவலர்கள் இருவரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மணிகண்டன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : SI , man who attacked, SI, arrested ,investigate
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...