புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வயது ஆவணங்களை திருத்தியதாக வந்த புகாரை அடுத்து தலைமை செயலாளர் அஷ்வினிகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். ரங்கநாதன் தனது பிறந்த தேதியை ஆவணத்தில் மாற்றி பதிவு செய்ததாக தலைமை செயலாளருக்கு புகார் சென்றுள்ளது.