×

சென்னை பள்ளிக்கரணையில் பேனரால் சுபஸ்ரீ இறந்த விவகாரம்: ஜெயகோபாலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனரால் சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் ஜெயகோபாலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேனர் வைத்த, கொடி கட்டிய பழநி, சுப்பிரமணி, சங்கர்,லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  ஏற்கனவே  ஜெயகோபால் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளது. பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது என தகவல் தெரியவந்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். எனினும் ஜெயகோபால் கடந்த 14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் 14 நாட்களாக தலைமறைவாக இந்த அவர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக பழனி, சுப்பிரமணி சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : death ,Chennai ,school ,Subasree ,arrest ,Jayakopal , Chennai, school, Subasree, Jayagopal, arrested
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...