தேனி: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியது. ஆள்மாறாட்டத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தேனி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.