×

ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாம் அருகே உடைந்த நிலையில் உள்ள வாய்க்கால் பாலம்

கரூர்: கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாம் பின்புறம் உள்ள தெரு நுழைவு வாயிலில் வாய்க்கால் பாலம் உடைந்த நிலையில் உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த முகாம் பகுதியின் பின்புறம் வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதிகள் உள்ளன. இதில், முதல் தெருவின் நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை வடிகால் பாலம் உள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, லேசான அளவில் வாய்க்கால் வடிகால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, தற்போது, பெரியளவில் உருமாறியுள்ளது.இதனால், நடந்து செல்பவர்களை தவிர மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் வாய்க்கால் வடிகால் பாலம் முற்றிலும் உடைந்து விடும் நிலையில் உள்ளது. எனவே, சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் இதனை பார்வையிட்டு குறுகிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ள இதனை விரைந்து சரி செய்து, போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Rayanur ,Sri Lankan Tamils ,camp ,Karur , Bridge, Karur
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...