×

வேலியே பயிரை மேய்ந்த கதை... சிறுமியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்: நண்பருடன் சேர்ந்து சித்தப்பா மகன்களே கொடூரம்

ஸ்ரீகாளஹஸ்தி: சிறுமியை அவரது சித்தப்பா மகன்கள் உள்பட 3பேர் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 10ம் வகுப்பு படித்துள்ளார். இவரது சித்தப்பா மகன்கள் ஸ்ரீஹரி, ராஜு. இவர்கள் முக்கூர் மண்டலம் சென்ரமாகுலப்பல்லி கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்கள் அண்ணன் உறவு என்பதால் சிறுமியிடம் பேசி பழகியுள்ளனர். அடிக்கடி அவரது வீட்டுக்கும் சென்று வந்துள்ளனர்.

இதேபோல் கடந்த 10ம்தேதி ஸ்ரீஹரி, ராஜு மற்றும் இவர்களது நண்பரான அருண் ஆகியோர் சிறுமியின் வீட்டுக்கு காரில் வந்துள்ளனர். அவரிடம், காரில் ஊர் சுற்றி பார்க்கலாம் வா என ஆசைவார்த்ைத கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய சிறுமி, அவர்களுடன் மகிழ்ச்சியாக சென்றார். ஆனால் ஸ்ரீஹரி உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே திட்டமிட்டபடி சிறுமியை காரில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழுதபடியே வீடு திரும்பினார். மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்கொலைக்கான காரணம் குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நேற்று முன்தினம் புங்கனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மதுசூதன் வழக்குப்பதிந்து ஸ்ரீஹரி, ராஜு, அருண் ஆகியோரை தேடி வருகிறார்.

10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது கொண்ட 10ம் வகுப்பு மாணவியிடம், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நட்பாக பழகியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று, தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வெளியில் சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் வயிறு பெரிதாகியுள்ளது. அதை பார்த்து அவரின் பெற்றோர் கேட்டுள்ளனர். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்ததில், 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

அப்போது, தன்னை புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (21), தமிழரசன் (19) ஆகியோர் பலாத்காரம் செய்துவிட்டனர் எனக்கூறியுள்ளார். இதுபற்றி மாணவியின் தந்தை, சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வெங்கடேஷ், தமிழரசன் ஆகியோர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வெங்கடேசை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். தமிழரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Abduction of a Girl , Little girl, joint sex, rape
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...