×

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும்: அய்யாக்கண்ணு

திருச்சி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். மணப்பாறை அடுத்த பூலாம்பட்டியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை வையம்பட்டி வழியாக கொண்டுவர கோரியும், வெள்ளம் வரும் காலங்களில பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு டேம், கண்ணூத்து டேம்களை நிரப்பக்கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும். விவசாயிகளின் மீது வங்கிகளில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கடுமையான வறட்சியை தமிழகம் கண்டது. உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : Ayyakkannu , Agricultural Credit, Discount, Pickle Struggle, Ayyakkannu
× RELATED திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளரை...