கோவை:கோவையில் ஓட்டலில் பொதுமக்களை தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கோவை காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது காட்டூர் சப்- இன்ஸ்பெக்டர் முத்து தாக்குதல் நடத்தினார். இதில், கடையில் சாப்பிட்ட ஆறுமுகம் (52), சதீஷ் (43), பூமிநாதன், கதிர்வேல், ஓசூரை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. புகாரயைடுத்து, தாக்குதல் நடத்திய சப்- இன்ஸ்பெக்டர் முத்து நேற்று அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் ஓட்டல் கடை நடத்துவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அதில், இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், விசாரணைக்கு பின்னர் சப்- இன்ஸ்பெக்டர் முத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மனித உரிமை ஆணையம் கமிஷனருக்கு நோட்டீஸ்ஓட்டலில் சாப்பிட்ட பொதுமக்களை எஸ்ஐ லத்தியால் அடித்த விவகாரத்தில் ேகாவை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது….
The post கோவை ஓட்டலில் பெண்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய எஸ்.ஐ. சஸ்பெண்ட் !! appeared first on Dinakaran.