மதுரை: மதுரையில் அரசு மருத்துவர் உதயராஜ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்தார். விருத்தாசலத்தை சேர்ந்த உதயராஜ் மதிச்சியம் பகுதியில் அறை எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.