×

பேராசிரியர் மர்மச்சாவு

சென்னை:  மயிலாப்பூர் என்எம்கே தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (60). ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர், கடந்த 3ம் தேதி, செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணைக்கு வந்து தங்கினார். இந்நிலையில், நேற்று அங்கு அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.
போலசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி  அவரது உறவினர்களுக்கு, தகவல் தெரிவி–்க்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், பண்ணை வீட்டில் சவுந்தரராஜன் அடித்து கொலை செய்யப்பட்டாரா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Marmachau , Professor, Mystery Death
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை