×

உதவி செய்வதுபோல் நடித்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு : 3 பெண்களுக்கு வலை

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (78). இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த சில வருடங்களுக்கு முன் பு இறந்துவிட்டார். இதனால், சுலோச்சனா  தனியாக வசித்து வருகிறார். நேற்று சோழிங்கநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுவிட்டு சுலோச்சனா வீட்டிற்கு  நடந்து சென்றபோது ஆட்டோவில் வந்த 3 பெண்கள், ‘‘வயதான காலத்தில் ஏன் நடந்து செல்கிறீர்கள்? நாங்கள் உங்களை வீட்டில் விடுகிறோம்’’ என அழைத்துள்ளனர்.  

அதற்கு மூதாட்டி, ‘‘பரவாயில்லை. வீடு பக்கத்தில் தான் இருக்கிறது.  நான் சென்று விடுவேன்’’ என கூறியுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் மற்றும் உள்ளே இருந்த 3 பெண்கள் மூதாட்டியை வலுக்கட்டாயமாக அழைத்து ஆட்டோவில் ஏற்றி சென்று  வீட்டில் இறக்கிவிட்டு 10 கொடுங்க’’ என்று வாங்கி கொண்டனர்.  வீட்டுக்கு வந்து பார்த்தபோது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க செயின் மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுலோச்சனா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chain to the Grandmother,3 women arrested
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...