நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.2.6 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பழைய பைபாஸ் சாலையில் சரவணன் என்பவர் காரை நிறுத்தி சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பணம் மாயம் ஆனது. காரின் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.