சென்னை: பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் நீரினை சேமித்து வைக்கும் பகுதியாக பழவேற்காடு ஏரி இருக்கும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய சுற்றுசூழல்த்துறை, தமிழக அரசின் செயலாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.