×

காங். செய்தி தொடர்பாளர்களாக பிரணாப் முகர்ஜியின் மகள், மீரா குமார் மகனுக்கு பதவி

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரின் மகன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் புதிதாக தேசிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளளார். இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரின் மகன் அன்சுல் குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவரான ஷர்மிஸ்தா டிவிட்டரில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் சுர்ஜிவாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



Tags : Meera Kumar ,Pranab Mukherjee , Cong. As, spokespersons, Daughter,Pranab Mukherjee,
× RELATED பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர்...