×

7,050 ஆடுகள் ₹2.50 கோடிக்கு விற்பனை

இடைப்பாடி :  கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 7050 ஆடுகள் ₹2.50 கோடிக்கு விற்பனையானது.  இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 7,050 ஆடுகள், 750 பந்தய சேவல், 1700 நாட்டுக்கோழி மற்றும் சேவல் மற்றும் 90 டன் காய்கறி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ₹4,600 முதல் ₹5,500 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹9 ஆயிரம் முதல் ₹11 ஆயிரம் வரையும் விற்பனையானது.

 பந்தய சேவல் ₹800 முதல் ₹4,000 வரையும், நாட்டுக்கோழி ₹200 வரையும், சேவல் ₹650 வரையும் விற்பனையானது. மேலும், 27 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி ₹300 முதல் ₹600 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக நேற்றை சந்தையில் ₹2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Goats , market,sale
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...