×

மரங்களில் தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம்: விளம்பரங்களை 10 நாட்களில் நீக்கவும் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மரங்களில் தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம் ,3 ஆண்டு சிறை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர் உட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை  அதிகரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நகரின் பெரும்பாலான சாலைகள் மற்றும் உட்புற தெருக்களில் மரங்கள், மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தங்கள் விளம்பரத்திற்காக மாநகராட்சி மரங்களில் விளம்பர பலகைகள், போஸ்டர்கள் என பல்வேறு விதமாக மரங்களை சேதப்படுத்துகின்றன. ஆனி அடித்தும் மரங்களை  சேதப்படுத்துகின்றன. சில நிறுவன உரிமையாளர்கள், தங்கள் நிறுவனத்தை தனித்துவமாக காண்பிக்க மரங்களில் பெயிண்ட் அடிப்பது, வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிப்பது, ஓயர்கள் மூலம் சுற்றிக்கொள்வது என பல்வேறு விதமாக  மரங்களை பயன்படுத்துகின்றன.

இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்கள் மூலம் மரங்கள் பட்டுபோவதுடன், அதன் ஆயுட்காலங்களும் குறைந்துபோகின்றன. மேலும், சென்னை மாநகராட்சி அழகு மாறுவதாவும் மாநகராட்சி கருதுகின்றது. எனவேதான், இந்த மாதிரியான  சம்பவங்களில் ஈடுபடுவர்களை தண்டிக்க, சென்னை மாநகராட்சி விதிப்படி 25,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை நிறுவனங்கள் 10  நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : mosquitoes , 25,000 mosquitoes fined for making unwanted items in trees
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை