×

மொகரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி நர்சிங், பி.பார்ம் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை:  மொகரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி நடக்கவிருந்த பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் தேர்வுகளை ஒத்திவைத்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகம் அறிவித்துள்ளது.மொகரம் பண்டிகை செப்டம்பர் 10ம் தேதி கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை ஹாஜி மொகரம் பண்டிகையை செப். 11ம் தேதி கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக  அரசுக்கு கடிதம் எழுதினார்.

 அதன் அடிப்படையில் மொகரம் பண்டிகை செப்டம்பர் 11ம் தேதி கடைபிடிக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் இரு தினங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற  இருந்த மருத்துவக்கல்வி சார்ந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “வரும் 11ம் தேதி  நடைபெற இருந்த பி.எஸ்சி நர்சிங் தேர்வு வரும் 13ம் தேதியும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், பி.பார்ம் தேர்வு வரும் 18ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags : festival , festival , Mogaram,Nursing ,B.Pharm exams ,11th
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!