×

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருவர் ஓட ஓட வெட்டிக்கொலை..: மர்மநபர்கள் தப்பியோட்டம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 6 பேர் கொண்ட கும்பல், ஒருவரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காலை 11 மணியளவில் ராஜசேகரன் என்பவர் சென்றுள்ளார். இந்நிலையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ராஜசேகரை வழிமறித்து, சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதைக்கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், கொலை செய்த மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்டுள்ள ராஜசேகர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2013ம் ஆண்டு செப்.,18ம் தேதி இரவு, வயலில் மின் மோட்டார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பனங்காடியைச் சேர்ந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக, ராஜசேகர் உள்ளிட்ட 12 பேரை சிவகங்கை தாலுகா போலீசார் அப்போது கைது செய்தனர். எனவே, இந்த இரட்டை கொலைக்கு பழிவாங்கும் வகையில் ராஜசேகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையில், கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.


Tags : Office ,Sivaganga District Collector , Sivagangai, Collector Office, Murder, Rajasekhar
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...