×

சொத்து தகராறில் தம்பி கொலை அண்ணனுக்கு ஆயுள் சிறை

சென்னை:ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன்கள் குமார் (48), வேலு (45). பூர்வீக சொத்து தொடர்பாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வேலு ஜமீன் பல்லாவரத்தை விட்டு வெளியேறி, சிட்லப்பாக்கம் பகுதியில் குடியேறினார். கடந்த 17-8-2014 அன்று குமார் தனது தம்பி வேலு வசிக்கும் சிட்லபாக்கத்துக்கு சென்று, தகராறில் ஈடுபட்டார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அதில், ஆத்திரமடைந்த குமார், அங்கிருந்த ஆட்டுக்கல்லை எடுத்து வேலுவின் தலையில் போட்டார். இதில், வேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது தொடர்பாக,  வேலுவின் மனைவி உஷா சிட்லபாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  குமாரை கைது செய்தனர் இந்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தலீலா,  சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் குமாருக்கு, ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சதீஷ்பாபு ஆஜரானார்.

Tags : Property dispute, brother murder, brother, life imprisonment
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...