×

ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடு அமல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்ததோடு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அடுத்த நாள் நகர்  அருகே உள்ள சவுராவில் கும்பல் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டது. இதில் காயமடைந்த அஸ்ரார் அகமது கான் என்ற வாலிபர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு அஸ்ரார் உயிரிழந்தார். அஸ்ரார் உயிரிழந்ததை அடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Tags : Back, Srinagar, Regulation ,Enforcement
× RELATED பேஸ்புக் கணக்கில் புகுந்து கைவரிசை...