×

திருப்பத்தூரில் திடீர் நிலநடுக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நேற்று திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள குரிசிலாப்பட்டு, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 8.41 மணியளவில் மக்கள் வீட்டில் இருந்தனர். அப்போது, திடீரென அதிர்வு சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது பலரும் வீட்டில் இருந்து வெளியே நின்று இருந்தனர். அப்போதுதான் திருப்பத்தூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது அவர்களுக்கு தெரியவந்தது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தாசில்தார் சிவப்பிரகாசத்திடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை நானும் உணர்ந்தேன். இதையடுத்து சென்னை தேசிய மேலாண்மை பேரிடர் படை அலுவலகத்தில் நில அதிர்வு ரிக்டர் அளவு பதிவாகி உள்ளதா? என்பது குறித்து கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் அளித்தவுடன் இதுகுறித்து தெரிய வரும்’’ என்றார்….

The post திருப்பத்தூரில் திடீர் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Sudden ,Tiruppathur ,Tirupattur ,Tirupattur district ,Kurisilapattu ,Kandili ,
× RELATED திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து