நாகை: வேதாரண்யம் அருகே வாய்மேடு காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். லோடு ஆட்டோவில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி, காவல் ஆய்வாளர் கருணாவிடம் காவலர் தகராறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக சிறப்பு காவல்படை காவலர் அருளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.