×

பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு: முதல்வர் பேச்சு

சென்னை: பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொதுப்பணித்துறையில் முறையாக பணிகள் மேற்கொள்ளவிலை எனில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.


Tags : Public Works, Testing, single, CM
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...