×

ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிய பயங்கரம்: காதலன் மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னை: சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் காதலியை வெட்டிய பின் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற காதலன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஈரோடு மாவட்டத்தை ேசர்ந்த வீரமணி என்பவரின் மகள் தேன்மொழி(25). இவர் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். தற்போது சென்னை ஈகா திரையரங்கம் எதிரே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த சுரேந்தர் (26) என்பவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் காதல் மாறியுள்ளது. இதற்கு தேன்மொழயின் பெற்ேறார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேன்மொழி தனது காதலனிடம் இருந்து விலக ஆரம்பித்தார். இதனால் தேன் மொழி மீது சுரேந்தர் கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தேன்மொழி ரயிலில் ஏறுவதற்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தபோது  அவரை வழிமறித்து பேச முயன்றார்.

ஆனால் சுரேந்தரை திட்டியபடி ரயில் நிலையத்திற்குள் வேகமாக தேன்மொழி சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்த சுரேந்தர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து தேன்மொழியின் இடது பக்க தாடை மற்றும் இடது பக்க கையில் ஓங்கி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கொலை செய்துவிட்டோமே என்ற பயத்தில் சுரேந்தர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவர் குதிப்பதற்கு முன்பே ரயில் சென்றதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாலும், மூளையில் ரத்தம் உறைந்து காணப்படுவதாகவும், அவற்றை அகற்றுவதற்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் சுரேந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Tags : death ,lover ,hospital , Girlfriend, lover, hospital, death
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...