×

குடிதண்ணீர் பிரச்னை எதிரொலி பள்ளிக்கு விடுமுறை

சென்னை: தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வந்து சேரவில்லை. பல இடங்களில் தண்ணீர் பிரச்னையால் பள்ளிகளை நடத்த முடியாமல் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகங்களும் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் குடிதண்ணீர் பிரச்சினையால் நேற்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது.  பள்ளி வளாகத்தில் போர் போட உள்ளதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டாம் என விடுப்பு அறிவித்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் நிலத்தடி போர் போட்டு இடத்தை மூன்று நாட்களில் சீரமைத்து விட முடியும் என்பதால் நேற்று விடுமுறை அறிவித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vacation ,school , Vacation , school echoing ,drinking water problem
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி