×

பலி எண்ணிக்கை 118 ஆக உயர்வு மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 3 குழந்தைகள் பலி: பீகாரில் பரிதாபம்

முசாபர்பூர்: பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக மேலும் 3 குழந்தைகள் இறந்துள்ளதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.  பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முசாபர்பூர் மாவட்டத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது. இங்கு கிருஷ்ணா அரசு மருத்துவமனையில் 398 பேரும், கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 154 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். குறிப்பிட்ட பழங்களை தின்றதால் குழந்தைகள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மேலும் 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதனால் மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் ஒரேநாளில் 2 பேர் இறந்ததை தொடர்ந்து அங்கு மட்டும் 97 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் நேற்று இறந்த ஒரு குழந்தையையும் சேர்த்து இங்கு மட்டும் 20 குழந்தைகள் இறந்துள்ளனர். இது தவிர கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஒரு குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன் இதே நோய் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்நிலையில் கடந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் நோயால் ஏராளமான குழந்தைகள் இறந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குழந்தைகள் நல மருத்துவர் கபீல்கான் மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.

இதற்காக சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற இலவச சேவையை தாமோதர்பூர் பகுதியில் தொடங்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார். மேலும் அவர் தனது டிவிட்டர் பதிவில் மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

Tags : children ,Bihar , Number of kills, meningitis, 3 children killed, Bihar
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...