சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தொழிலாளர்களும், எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இசக்கி துரை ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.